பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி : ராமகிருஷ்ணா எம்.எச்.எஸ்.எஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி

கோவை : கோவையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணி, 192 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


கோவை : கோவையில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணி, 192 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 'கோவை ரோட்டரி கிளப்பின் மெட்ரோபொலிஷ் கோப்பை' கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஶ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் பள்ளி அணியும், ஶ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி அணியும் மோதின.



முதலில் விளையாடிய ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அணி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 25 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 231 ரன் குவித்தது. à®‡à®¤à¯ˆà®¤à¯ தொடர்ந்து களத்தில் இறங்கிய ஶ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 21.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 39 ரன் மட்டுமே எடுத்தது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக, பி.எம்.பிரசன்னா-106*(76) , தேவ் பிரசாத்- (38), வினய்- (44*) ரன் எடுத்தனர்.



பி.எம்.பிரன்னாவின் அபார பந்து வீச்சால் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேட்ரிக் உயர்நிலைப் பள்ளி 231 ரன்கள் எடுத்து இறுதிச் சுற்றுக்கு தகுதியானது.

Newsletter