அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாரா வாலிபால் வீரர்கள் மனு

கோவை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாற்றுத்திறனாளி வாலிபால் போட்டி வீரர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாற்றுத்திறனாளி வாலிபால் போட்டி வீரர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் சங்கத்தின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் அமர்ந்தவாறு விளையாடும் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், சிறப்பாக விளையாடி பல்வேறு பரிசுகளை வென்றுள்ளோம். இதுபோன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடும் தங்களுக்கு, பயிற்சி வசதி, உபகரணங்கள் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை மற்றும் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.



எனவே, நேரு விளையாட்டு அரங்கில் மாற்றுத் திறனாளி வீரர்கள் பயிற்சிக்காக தனி இடம் ஒதுக்க வேண்டும், போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கு மாவட்ட அளவிலான விருதுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். 

இது குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் பாரா வாலிபால் சங்கத்தின் செயலாளர் டி. பிரின்ஸ் கூறுகையில், "மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளது. அண்மையில், ஈரோட்டில் நடந்த தொடரிலும் 2-வது பரிசை கைப்பற்றியுள்ளோம். போட்டிகளில் பங்கேற்பதற்கு சொந்த செலவை செலவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போதிய நிதியுதவி இல்லாததால் உபகரணங்கள், போக்குவரத்து செலவுகள் மற்றும் ஆடைகள் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இன்றி தவித்து வருகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய உதவிகளை செய்து தர வேண்டும்," இவ்வாறு கூறினார். 

Newsletter