சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ரியல் காஷ்மீர் எஃப்சி அணி : ரசிகர்கள் ஏமாற்றம்

கோவை : ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை ரியல் காஷ்மீர் எஃப்சி அணி தோற்கடித்தது.

கோவை : à®¹à¯€à®°à¯‹ ஐ-லீக் கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை ரியல் காஷ்மீர் எஃப்சி அணி தோற்கடித்தது.



வ.உ.சி. மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை எஃப்சி அணியினருக்கு கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டனர். இரு அணியினரும் ஆன பலத்துடன் மோதியதால், முதல்பாதி ஆட்டத்தில் எந்தவித கோலும் அடிக்கமுடியவில்லை. இருப்பினும், நடுவரின் தவறான முடிவால், 78-வது நிமிடத்தில் ரியல் காஷ்மீர் எஃப்சி அணியின் கோஃபி டெட்டா கோல் அடித்தார். இதனால், உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 



இதைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கவில்லை. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் எஃப்சி அணி வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.



இந்தப்போட்டியில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் ரோபெர்ட்டோவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருது வழங்கி கவுரவித்தார்.

Newsletter