தேசிய அளவில் வெற்றி பெற்ற ரோல் பந்தாட்டக்காரர்ளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டு

கோவை : சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல் பந்து சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற பள்ளி மாணவர்களைக் கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

கோவை : சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல் பந்து சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற பள்ளி மாணவர்களைக் கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் நடைபெற்ற ரோல் பந்து சாம்பியன்ஷிப் டிசம்பர் 18 -ம் தேதி தொடங்கி 22 -ம் தேதி நிறைவுற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று பதக்கங்களை வென்ற கோவை ரோல் பந்தாட்டக்காரர்கள், இன்று மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிகரனை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.

 

இந்த போட்டியில், 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் கோவையைச் சேர்ந்த 5 பெண் பந்தாட்டாக்காரர்கள் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றனர். மேலும், ஆண்கள் பிரிவை சேர்ந்தவர்கள் போட்டியில் 4 -வது இடத்தை பிடித்தனர். 

தேசிய அளவில் நடைபெற்ற இந்த சாம்பியஷிப்பில் கலந்து கொண்டு வென்றவர்கள் அந்த பரிசுக் கோப்பையுடன் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். அவர்களின் முயற்சியையும், உழைப்பையும் கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். 

மேலும், இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், பஞ்சாப், சத்தீகர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ரோல் பந்தாட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter