கோவையில் நடைபெற்ற ஐ -லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்ற ஐ -லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில், சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி 4 -3 என்ற கோல் கணக்கில் அய்சால் அணியை வென்று வீழ்த்தியது.

கோவை : கோவையில் நடைபெற்ற ஐ -லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில், சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி 4 -3 என்ற கோல் கணக்கில் அய்சால் அணியை வென்று வீழ்த்தியது. 



இந்தியாவில் முழுவதும் உள்ள உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் ஐ -லீக் தொடரில் பங்கேற்கும். இந்த லீக் போட்டி, கோவை மாவட்டம் நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. அதில், சென்னை சிட்டி, அய்சால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28 -வது நிமிடத்தில் சென்னை அணியின் சான்டிரோ ரோட்ரிக்ஸ் முதல் கோலடித்தார். இதற்கு, 37 -வது நிமிடத்தில் அய்சால் அணியின் ஆல்பர்ட் ஒரு கோலடித்து அபாரமாக விளையாடினார். 



இந்நிலையில், முதல் பாதி முடிவில் போட்டி 1 -1 கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து, இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணிக்கு 60 -வது நிமிடத்தில் பெட்ரோ மான்ஜி, 69 -வது நிமிடத்தில் சான்டிரோ ரோட்ரிக்ஸ் கோலடித்து பலம் சேர்த்தனர். மேலும், ஸ்டாப்பேஜ் நேரத்தில் எழுச்சி கண்ட அய்சால் அணியின் இசாக், லால்கவ்புய்மாவியா தலா ஒரு கோலடித்து ஆறுதல் தந்தனர்.



இதனிடையே, ஆட்டநேர முடிவில் சென்னை சிட்டி அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 13 போட்டியில், 9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என 30 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சான்டிரோ ரோட்ரிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Newsletter