கேம்ஃபோர்டு கூடைப்பந்துப் போட்டியில் யுவபாரதி பள்ளி அணி சாம்பியன்

கோவை : 14 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான கேம்ஃபோர்டு கூடைப்பந்து போட்டியில் யுவபாரதி பள்ளி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

கோவை : 14 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான கேம்ஃபோர்டு கூடைப்பந்து போட்டியில் யுவபாரதி பள்ளி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

தேசியப் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளின் திறமைகளையும், வெற்றியையும் கொண்டாடும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கேம்ஃபோர்டு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், மாநகரில் இருந்து 7 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளின் முடிவில், கேம்ஃபோர்டு சர்வதேசப்பள்ளி, யுவபாரதி ஆகிய நான்கு பள்ளிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.



விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் யுவபாரதி பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளி 2-வது இடத்தையும், சி.எஸ் அகாடமி 3-வது இடத்தையும் பிடித்தன.



இப்போட்டியில் சிறந்த டிஃபென்டர் விருதினை சி.எஸ் அகாடமி பள்ளி மாணவி தர்ஷனாவும், சிறந்த ரெபௌண்டெர் விருதினை கேம்ஃபோர்டு பள்ளி மாணவி ஸ்ரேயா ஸ்ரீகாந்த்தும், சிறந்த முறையில்பந்தினைக் கையாளும் விருதினை இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவி ப்ரதியும், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினை யுவபாரதி பள்ளி மாணவி ரிதிவர்ஷினியும் பெற்றுக்கொண்டனர்.



கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் அருள்ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Newsletter