ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. விலக்கியது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மீதான தடையை பி.சி.சி.ஐ. விலக்கியது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது, பாண்டியா மற்றும் ராகுலின் சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அப்போது, ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் மன்னிப்புக் கேட்டு பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, ராகுல் மற்றும் பாண்டியாவுக்கு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்தது. 

இதனால், இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக சொந்த நாட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் பிசிசிஐ அவர்கள் மீதான தடையை ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

Newsletter