மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் என்.வி. சந்திரசேகர் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டினர்.


கோவை : கோவையில் நடைபெற்ற மூத்தோர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிக்காட்டினர். 



கோவை சென்ட்ரல் எக்ஸைஸ் ரீகிரியேஷன் கிளப் மற்றும் கோவை மாவட்ட மூத்தோர் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பினர் சேர்ந்து 4-வது மாநில அளவிலான மூத்தோர் டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. ஜி.எஸ்.டி. பவனில் நடந்த இந்தப் போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 103 வீரர்கள் பங்கேற்றனர். 40 வயதிற்கு மேற்பட்டோர், 50, 60, 65 மற்றும் 70 வயதுடையவர்கள் என பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 

 

இதில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் சென்னையைச் சேர்ந்த சதானந்தா பாஸுவும், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஆர்.பி.ஐ.யைச் சேர்ந்த ஆர். ராமச்சந்திரனும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மதுரையைச் சேர்ந்த என்.வி. சந்திரசேகர் மற்றும் பிற பிரிவுகளில் எம்.எஸ். சுப்ரமணியன், இருதயராஜ் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 



இதேபோல, இரட்டையர் பிரிவில் செந்தில்குமார், சுவாமிநான் ஜோடியை, கல்யாணராமன் மற்றும் என்.வி. சந்திரசேகர் ஜோடி வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ரூ. 26,000 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

 

Newsletter