கோவையில் தொடங்கியது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

கோவை : இளைஞர்களுக்கு இடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது.

கோவை : இளைஞர்களுக்கு இடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. 



விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை நேரு மைதானத்தில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. 7-ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில், ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, பாட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், டேபிள் டென்னில், நீச்சல் போட்டி, வாலிபால் கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 



21 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் மட்டுமே இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியும். இதில், சிறந்து விளங்குபவர்கள் இந்த ஆண்டில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறலாம். 

முதற்கட்டமாக, நேரு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஃப்ளோர் எக்ஸர்சைஸ், வால்ட், பொம்மல் ஹார்ஸ், பேரலல் பார்ஸ், ஹோரிஷான்டல் பார்ஸ், பீம் மற்றும் ரிங்ஸ் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. 

வி. செல்வமுருகன் (பொம்மல் ஹார்ஸ்), டி. அழகர் (ரோமன் ரிங்ஸ்), ஜே. சஞ்சய் அபிஷேக் (ஃப்ளோர் எக்ஸர்சைஸ்), ஜி. ரோகித் (டி. வால்ட்), ஜி.இஸ்ரேவல்ராஜ் (ஃப்ளோர் எக்ஸர்சைஸ்), எஸ். நேஹா (வால்டிங் டேபிள்), எஸ். வைஷ்ணவி (அன்ஈவன் பார்), ஜி. அஞ்சனா (பேலன்சிங் பீம்) ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். 

Newsletter