​2-வது மாநில இளையோர் தடகள போட்டி : பதக்கம் வென்ற வீரர்களுக்கு கோவை துணை கமி‌ஷனர் பாராட்டு

கோவை : சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோரின் தடகள போட்டியில் வென்ற வீரர்களை கோவை போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித் குமார் பாராட்டிக் கவுரவித்தார்.

கோவை : சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளையோரின் தடகள போட்டியில் வென்ற வீரர்களை கோவை போக்குவரத்து துணை கமி‌ஷனர் சுஜித் குமார் பாராட்டிக் கவுரவித்தார். 



சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது மாநில இளையோர் தடகள போட்டிகளில், ஜெனேசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த பயிற்சியாளர் வைரவநாதனின் வழிகாட்டுதலின் பேரில், 11 தடகள வீரர்கள், தங்கள், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்ட 14 பதக்கங்களை வென்று கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

இந்த போட்டியில், பெண்களுக்கான பிரிவில் 5000 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் பவித்ரா தங்கப் பதக்கத்தையும், 3000 மீட்ட ஓட்டப் பந்தயத்தில் சஞ்சய் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 800 மீ ஓட்டத்தில் விஹாசினி வெண்கலத்தையும், 200 மீ ஓட்டத்தில் பத்மா பாரதி வெண்கலத்தையும், 1500 மீ மற்றும் 5000 மீ ஓட்டத்தில் சதீஷ்குமார் தங்கத்தையும், 10000 மீ ஓட்டத்தில் கோகுல் தங்கத்தையும் மற்றும் 5000 மீ ஓட்டத்தில் வெண்கலத்தையும் வென்றார். 



இதைப் போலவே, விஷ்ருதா 400 மீட்டருக்கான தடை தாண்டும் போட்டியில் தங்கமும், 10,000 மீட்டரில் மணிகண்டன், அகிலாஷ், அபிலாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். இவர்களின் உழைப்புக்குக் கிடைத்த பயனைத் துணை கமிஷனர் சுஜித் குமார், அவருடைய அலுவலகத்தில் வைத்து சந்தித்து பாராட்டி கவுரவித்தார். 



Newsletter