கோவையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கோவை : மாநில அளவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.ஆர் தேவர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று கோவையில் தொடங்கியது.


கோவை : மாநில அளவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.ஆர் தேவர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நேற்று கோவையில் தொடங்கியது. 

மாவட்ட அணிகள் பங்கேற்கும் 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்த கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணியினர் நேற்று மோதிக் கொண்டன. அந்த அரையிறுதிப் போட்டியில் கோவையை அணியைச் சேர்ந்த கோவிந்த் மற்றும் இம்ரான் கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை சூடுபிடிக்கச் செய்தனர். 

திண்டுக்கல் அணியின் ஆட்டத்தைத் தொடக்கிய மிதிலேஷை, முதல் ஓவரிலே ஆட்டமிழக்கச் செய்தார் கோவை அணி பந்து வீச்சாளர் கோவிந்த். அதனைத் தொடர்ந்து சிறந்த பேட்ஸ்மேனான எம்.பூபதி, இம்ரான் கானின் சுழற்பந்துகளை லாகவமாக கையாண்டு 97 ரன்களை குவித்தார். அதோடு, திண்டுக்கல் அணியைத் திக்குமுக்காட செய்த கோவிந்த், 76.5 ஓவருக்கு 197 ரன் என்ற கணக்கில் திண்டுக்கல் அணியின் ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இதையடுத்து, விளையாடிய கோவை அணி விக்கெட் இழப்பில்லாமல் 47 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் அணி 76.5 ஓவர்களில் 197 ரன்கள் (எம்.பூபதி - 97, எம்.மகரிஷ் -34, ஜி.கோவிந்த் 3/44, எம்.இன்ரான் கான் 3/46) கோவை 19 ஓவர்களில் 47/0 (ஶ்ரீராம் ஈஸ்வர் -25, பி.சச்சின் -22) என விளையாடின. 

Newsletter