சச்சினின் இரட்டை சதத்தால் வெற்றியின் விளிம்பில் கோவை அணி

கோவை : உள்மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சச்சினின் இரட்டை சதத்தால் கோவை அணி வெற்றி பெறும் தருவாயில் உள்ளது.

கோவை : உள்மாவட்ட கிரிக்கெட் போட்டியில் சச்சினின் இரட்டை சதத்தால் கோவை அணி வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பி.ஆர். தேவர் டிராபியின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி, முதல் இன்னிங்சில் 76.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக, பூபதி (97), எம்.மாகரிஷ் (34) ரன்கள் எடுத்தனர். கோவை அணிக்கு ஜி. கோவிந்த் (3/44), எம். இம்ரான்கான் (3/46) என தங்களது பங்களிப்பை அளித்தனர். 



இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கி கோவை அணிக்கு பி.சச்சின் இரட்டை சதம் விளாசினார். 90 ஓவர்களில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சச்சின் 214 (நாட்அவுட்), ஆர்.பிருத்தீவ் 46 ரன்களும், வி. ராம் ஈஸ்வர் 40 ரன்களும் எடுத்தனர்.  



168 ரன்கள் பின்தங்கிய நிலையில், திண்டுக்கல் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-ம் நாள் ஆட்டநேரம் முடிவில், அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒருதினம் எஞ்சியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் கோவை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter