மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கோவை அணி தேர்வு

கோவை : மாநில அளவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தேவர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கோவை அணி தகுதி பெற்றது.

கோவை : மாநில அளவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தேவர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு கோவை அணி தகுதி பெற்றது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மாநில அளவில் நடத்தும் தேவர் கோப்பைக்கான போட்டி கோவை பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 16 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 



நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், திண்டுக்கல் அணியும் கோவை அணியும் மோதிக்கொண்டன. முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் பூபதி அதிரடியாக விளையாடி 97 ரன்கள் குவித்தார். கோவை அணியின் தொடக்கவீரர் சச்சின் ஆட்டமிழக்காமல் விளையாடி 214 ரன்களை எடுத்து திண்டுக்கல் அணியினை பின்னுக்குத் தள்ளியதால், இரண்டாம் நாளின் இறுதியில் கோவை அணி 356 ரன்கள் குவித்தது. 



இதையடுத்து, 168 ரன் வித்தியாசத்தில் கோவை அணி முன்னிலை வகித்தது. இன்று நடைபெற்ற இரண்டாம் ஆட்டத்தில் திண்டுக்கல் அணி பூபதி சதமடித்து (102 *) சிறப்பாக விளையாடிய போதும், திண்டுக்கல் அணி 189 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மேலும், 8 -வது ஓவரில் 31 ரன்களை மட்டும் எடுத்து சுலபமாக கோவை அணி இறுதிச்சுற்றுக்குத் தயாரானது. 

Newsletter