முதல்வர் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டி : ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணிக்கு வெற்றி

கோவை : மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டியில், ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி வெற்றி வாகையை சூடியது.

கோவை : மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான பூப்பந்தாட்ட போட்டியில், ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி வெற்றி வாகையை சூடியது. 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில், 7 அணிகளும், பெண்கள் பிரிவில், 10 அணிகளும் பங்கேற்றனர். முதலில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று மற்றும் அதில் தகுதி பெற்ற 4 அணிகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. 



இந்த லீக் போட்டிகளில், ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணியும், பொள்ளாச்சி கிளப் அணி, ரத்தினம் கல்லூரி அணி மற்றும் கே.சி.டி கல்லூரி அணி ஆகியவை ஒன்றுக்கொன்று சளைக்காமல் மோதிக் கொண்டன. அதில், ஶ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணி எந்த இழப்புமில்லாமல் சாம்பியன்சிப்பை வென்றது. பொள்ளாச்சி கிளப் அணி இரண்டாம் இடத்தையும், ரத்தினம் மற்றும் கே.சி.டி கல்லூரி அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்தன. 



இதைப் போலவே, பெண்கள் அணியில் நிர்மலா மகளிர் கல்லூரி அணி கோப்பையை வென்றது. காருன்யா கிளப் இரண்டாம் இடத்தையும், ஶ்ரீ பத்மாவதி அம்மாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணமாள் மகளிர் கல்லூரி முறையே 3 -ம் மற்றும் 4 -ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டன. இப்போட்டியில், வென்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். 

Newsletter