மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி : முதல்வர் கோப்பையை வென்றது பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி

கோவை : மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி வாலிபால் கிளப் அணியும் கோப்பையை வென்றனர்.

கோவை : மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி வாலிபால் கிளப் அணியும் கோப்பையை வென்றனர். 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில், 21 வயதிற்குட்பட்டோட்ருக்கான போட்டியில், ஆண்கள் பிரிவில் 11 அணியும் பெண்கள் பிரிவில் 6 அணியும் பங்கேற்றன. முதலில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று மற்றும் அதில் தகுதி பெற்ற 4 அணிகளுக்கு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. 

அதில், ஆண்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று பொள்ளாச்சி அணி முதலிடத்தையும், ரத்தினம் காலேஜ் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இதைப் போலவே, பெண்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிக் கல்லூரி, என்.ஜி.எம் காலேஜ், அவினாசிலிங்கம் முறையே முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றின. 

Newsletter