தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி : இறுதிப் போட்டியில் ஜெயந்திரா அலுமினி, திருநெல்வேலி அணிகள்

கோவை : கோவையில் நடைபெற்று வரும் 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டியில், ஜெயந்திரா அலுமினி, திருநெல்வேலி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கோவை : கோவையில் நடைபெற்று வரும் 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டியில், ஜெயந்திரா அலுமினி, திருநெல்வேலி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 



பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் உடற்கல்வி துறை சார்பில் 14-வது தென்னிந்திய அளவிலான சபக்தக்ரா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில், 11 ஆண்கள் அணி மற்றும் 7 பள்ளிகள் அணி என மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டன. பள்ளி அளவில், பிரீமியர் மற்றும் சாம்பியன்ஷிப் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்தப் போட்டியானது, குழு போட்டி (அணிக்கு 9 பேர்), ரெகு (அணிக்கு 3 பேர்) மற்றும் டபுள்ஸ் என பல்வேறு ஆட்டங்கள் நடத்தப்பட்டன. 

ஆண்கள் ரெகு பிரிவின் அரையிறுதிப் போட்டியில் திருநெல்வேலி அணி 2-1 என்ற செட் கணக்கில் ஜெயேந்திர அணியை தோற்கடித்தது. மற்றொரு அரையிறுதியில் சென்னை அணி 2-0 என்ற செட் கணக்கில் டி.ஏ.சி.டி.யை வீழ்த்தியது. 



இரட்டையர் பிரிவுப் போட்டியில் ஜெயேந்திர அலுமினி அணி 2-0 என்ற செட் கணக்கில் டி.ஏ.சி.டி. கோவையை வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு போட்டியில் திருநெல்வேலி அணி 2-0 என்ற செட் கணக்கில் சென்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

Newsletter