கோவையில் தென்னிந்தியளவில் கூடைப்பந்து போட்டி : மார்க் இவானோஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் பல்கலை.,அணிகள் சாம்பியன்

கோவை : ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மார்க் இவானோஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் பல்கலை., சாம்பியன் பட்டத்தை வென்றன.


கோவை : ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மார்க் இவானோஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் பல்கலை., சாம்பியன் பட்டத்தை வென்றன. 



கோவை மாவட்டம், ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 -ம் ஆண்டு 'ஜாஷா 2019' கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணியும், பெண்கள் பிரிவில் 12 அணியும் என 20 அணிகள் கலந்து கொண்டன. 



இப்போட்டியில், பெண்கள் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜெயலெட்சுமி நினைவு கோப்பையும், ஆண்கள் பிரில் வென்றவர்களுக்கு வி.ஆர்.குமரவேல் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டன. தென்னிந்த அளவில் நடைபெற்ற இந்த கூடைப்பந்தாட்ட போட்டி லீக் முறைப்படி நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பிரிவில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மார்க் இவானோஸ் கல்லூரி அணியும் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலை., அணியும் கோப்பையை வென்றனர். 



இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சுமாராக ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2 -ம் இடத்தைப் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கு ஆண்கள் பிரிவில் மார்க் இவானோஸ் கல்லூரியை சேர்ந்த ஜெசின் மத்யூ மற்றும் பெண்கள் பிரிவில் ஹிந்துஸ்தான் பல்கலை., அணியின் பார்த்திபாப்ரியா தேர்வாகினர். 

Newsletter