கோவையில் முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் தொடக்கம்

கோவை : கோவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது.

கோவை : கோவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது. 



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் கோர்ட்டில் தொடங்கியது. 21 வயதிற்குட்பட்டோருக்கான இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகளும் என மொத்தம் 22 அணிகள் பங்கேற்றன. 



இப்போட்டியில், நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட முதல் 4 அணிகள் அடுத்து ரவுண்ட் ராபின் முறைப்படி விளையாடுவார்கள். அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி வாய்ப்பை பெறும். 

நேற்று நடைபெற்ற முதற்சுற்று ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் விங்க்ஸ் கூடைப்பந்து கிளப், ரத்தினம் சி.ஏ.எஸ், பேஷன் பொள்ளாச்சி, ஒய்.டபுள்யூ.சி.ஏ, ஜெயபாரதி கூடைப்பந்து கிளப், கோல்டன் சிட்டி கிளப் அணிகளும், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கூடைப்பந்து கிளப் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் வெற்றி கண்டன.



Newsletter