முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி : பி.எஸ்.ஜி அணிக்கு இரட்டை வெற்றி

கோவை : கோவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபிரிவிலும் பி.எஸ்.ஜி அணி கோப்பையை வென்றது.

கோவை : கோவை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபிரிவிலும் பி.எஸ்.ஜி அணி கோப்பையை வென்றது.

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (கோவை) சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் கோர்ட்டில் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. 21 வயதிற்குட்பட்டோருக்கான இந்த போட்டியில், ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகளும் என மொத்தம் 22 அணிகள் பங்கேற்றன. 

நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்தில், ஆண்கள் பிரிவில் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட முதல் 4 அணிகளான பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, விங்ஸ் அண்ட் ஒய்.எம்.சி.ஏ ஆகியவை அடுத்து ரவுண்ட் ராபின் முறைப்படி விளையாடினர். அந்த ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்று பி.எஸ்.ஜி அணி வெற்றி வாய்ப்பை பெற்றது. அதைப் போலவே, பெண்கள் பிரிவில் விளையாடிய பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி அணியும் வெற்றி வாய்ப்பைப் பெற்றது. 



இந்த போட்டியில், சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ அம்மன் கே அர்சுணன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வெற்றி பெற்ற அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.750 மற்றும் 3ம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.500 கொடுக்கப்பட்டது. 

Newsletter