கோவையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி : 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கோவை : கோவை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கோவை : கோவை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு 100 மீ.,200 மீ.,400 மீ., குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.



6-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் ஜி.ஆர்.ஜி. சி.பி.எஃப். பள்ளியைச் சேர்ந்த எஸ். மொகித் (100 மீ. ஓட்டம்), எஸ். நிகிலேஷ் 200 மீ. ஓட்டம்), எஸ்.நிதின் (குண்டு எறிதல்), அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ். கடம்வீஸ்வரர் (நீளம் தாண்டுதல்), ஸ்டெயிண்ஸ் மாணவர் ஏ. முகமது ஷகின் (உயரம் தாண்டுதல்) ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடித்தனர்.

7-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், ரிபில் நியாஸ், ஷான் வில்லியம், மதன் பிரசாந்த், ஶ்ரீகுரு, கார்த்திகேயன், சரண், செந்தூர், சஞ்சய், முஸ்தபா, ஆஸ்ஹர், கமலேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.



இதேபோல, பெண்கள் பிரிவில், கீர்த்தனா, அப்ஸரா, அக்ஸரா, ஷிவானி, மதியழகி, ஹர்சினி, கமலி, சஹானா, நேஹரசி, நிவேதா, விஜயவர்தினி, சுனிக்‌ஷா, ஶ்ரீனிகா, விஜயதர்சினி, சக்திஶ்ரீ, மனுஶ்ரீ, ரோஜா, சுபிக்‌ஷா, ஶ்ரீநிதி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சி.ஆர். அனந்தலஷ்மி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.



இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இந்த மாத இறுதியில் நடைபெறும் பிராந்திய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter