கோவையில் மண்டல அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் தொடக்கம்

கோவை : மண்டல அளவில், சென்டைஸ் -2019 கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகள், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

கோவை : மண்டல அளவில், சென்டைஸ் -2019 கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகள், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.



இதில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 22 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. இதன் முதல் நாள் ஆட்டத்தில், நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், வெள்ளாலர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, கலைஞர் தொழில்நுட்பக் கல்லூரி அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.



அதை போலவே நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், குமரகுரு கல்லூரி அணி, 2-1 கோல் என்ற கணக்கில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி அணியை வென்றது. மேலும், ஶ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ஹிந்துஸ்தான் கல்லூரி அணியை வீழ்த்தி வெற்றி கண்டது. 

Newsletter