12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் சென்னை - பெங்களூரூ மோதல்

ஐ.பி.எல், 2019-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல், 2019-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

12-வது ஐ.பி.எல். டுவென்டி - டுவென்டி கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின், ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Newsletter