கோவையில் மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கோவை : கோவையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் மாவட்டங்களுக்கிடையேயான, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.

கோவை : கோவையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் மாவட்டங்களுக்கிடையேயான, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. 



கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம், டி.என்.சி.ஏ உடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி நேற்று பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அணிகள் பங்கேற்றன. இந்த முதல் கட்ட ஆட்டமானது நாளை வரை நடைபெறவுள்ளது. 



இந்த போட்டிகள், லீக் முறைப்படி நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும், முதல் ஆட்டத்தில் 3 அணிகளுடன் மோத வேண்டும். அதில், முன்னிலை வகிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தேர்வாகும். 

மேலும், நேற்று நடைற்ற முதல் ஆட்டத்தில், கோவை அணி, தஞ்சாவூர் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. திண்டுக்கல் அணி, திருவாரூர் அணியினை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், ராமநாதபுரம் அணியும், நீலகிரி அணியும் வென்றன. 

Newsletter