மண்டல அளவிலான கால்பந்தாட்ட போட்டி : ஹிந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி

கோவை : கோவையில் மண்டல அளவில், பொறியியல் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கோவை : கோவையில் மண்டல அளவில், பொறியியல் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி வெற்றி பெற்றது. 



கோவையில் மண்டல அளவில், சென்டைஸ் -2019 கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகள், சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நேற்று நிறைவடைந்தன. இதில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 22 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்றன. 



இதில், அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த ஹிந்துஸ்தான் கல்லூரி அணி, எதிர் அணியினை 4-2 என்ற கோல் கணக்கில் கோப்பையை வென்றது. மேலும், சிஐடியின் முதல்வர் டாக்டர்.வி செல்லதுரை மற்றும் துணை வார்டன் டாக்டர் மாரிமுத்து தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிக்கு, பரிசுகளை வழங்கினர்.



Newsletter