ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கோவையைச் சேர்ந்த வீராங்கனை தகுதி

கோவை : கர்நாடகாவில் நடைபெறும் 3-வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை கோவையைச் சேர்ந்த வீராங்கனை பெற்றுள்ளார்.

கோவை : கர்நாடகாவில் நடைபெறும் 3-வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை கோவையைச் சேர்ந்த வீராங்கனை பெற்றுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெலஹாம் பகுதியில் உள்ள ஷிவாங்கா ஸ்கேட்டிங் ரிங்கில் 3-வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற இருக்கிறது. இதில், கோவை சுகுணா பி.ஐ.பி. பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மஹிமா ஸ்ரீ பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ரோல்பால் போட்டியில் பயிற்சி பெற்று வரும் இவர், குறைந்த காலத்தில் தனது அசாதாரண திறமையை வெளிக்காட்டி, மாநில, தேசிய அளவில் பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இதன்மூலம், அவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். 



கோவை ரோல்பால் கூட்டமைப்பின் செயலாளரும், பயிற்சியாளருமான வி. ராஜசேகரிடம் மஹிமா ஸ்ரீ பயிற்சி பெற்று வருகிறார். 

தனது மாணவி ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வானது குறித்து பயிற்சியாளர் வி. ராஜசேகர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது :- மஹிமா மாவட்ட மற்றும் மாநில அளவிலான அணியில் முக்கியத்துவம் வாய்ந்த வீராங்கனை. இவர் ஏராளமான போட்டிகளை விளையாடியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ரோல்பால் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. எங்களது வீரர், வீராங்கனைகள் மாநில மற்றும் தேசிய அளவில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மஹிமா சிறப்பாக செயல்படுவார், என்றார். 

Newsletter