ரோல்பால் விளையாட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது : இந்திய ரோல்பால் கோல்கீப்பர் மஹிமாஶ்ரீ

கோவை : ரோல்பால் விளையாட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக இந்திய ரோல்பால் கோல்கீப்பர் மஹிமாஶ்ரீ தெரிவித்துள்ளார்.

கோவை : ரோல்பால் விளையாட்டு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக இந்திய ரோல்பால் கோல்கீப்பர் மஹிமாஶ்ரீ தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெலஹாம் பகுதியில் உள்ள ஷிவாங்கா ஸ்கேட்டிங் ரிங்கில் நடைபெற்ற 3-வது ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணியில், கோவை சுகுணா பி.ஐ.பி. பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மஹிமா ஸ்ரீயும் இடம்பெற்றிருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக ரோல்பால் போட்டியில் பயிற்சி பெற்று வரும் இவர், குறைந்த காலத்தில் தனது அசாதாரண திறமையை வெளிக்காட்டி, மாநில, தேசிய அளவில் பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இதன்மூலம், அவர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும், மஹிமாஶ்ரீ கோவை ரோல்பால் கூட்டமைப்பின் செயலாளரும், பயிற்சியாளருமான வி. ராஜசேகரிடம் பயிற்சி பெற்று வருகிறார். 



தான் இடம்பெற்ற இந்திய அணி ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மஹிமாஶ்ரீ கூறியதாவது :- மற்ற நாடுகளின் வீராங்கனைகளுடன் புதுப்புது யுக்திகளுடன் விளையாடுவது சிறந்த அனுபவமாகும். இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ள இந்த விளையாட்டில் வலிமையான யுக்திகளுட விளையாடினாலும், பிற நாடுகளின் அணுகுமுறை வித்தியாசமானது. எனவே, மாணவர்கள் இந்த விளையாட்டின் மீது தீவிரமான ஆர்வம் கொண்டால், சமநிலை, ஒருங்கிணைப்பை கற்றுக் கொள்ள முடியும். இது, கல்வியையும், விளையாட்டையும் ஒருசேர கொண்டு செல்ல உதவுகிறது, என்றார்.

“இந்த விளையாட்டு எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்ததால், மஹிமாஶ்ரீ இந்த நிலையி அடைந்துள்ளார். இந்திய விளையாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரோல் பால் பயிற்சியை, திறமையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க தயாராக இருக்கிறோம்,” என்கிறார் கோவை மாவட்ட ரோல்பால் சங்கத்தின் செயலாளர் ராஜசேகர்.

Newsletter