மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டி கோவையில் இன்று தொடங்கியது. 

பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியை மேம்படுத்தவும், வீரர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்கும் விதமாக, பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், சாஷும் அறக்கட்டளையுடன் முதன் முறையாக இணைந்து, 'சேலஞ்சர் கோப்பை 2018-19' என்ற மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை வனக்கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தப் போட்டி, நாளையுடன் நிறைவடைகிறது. 



இந்தத் தொடரில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 42 வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு ப்ளூ, தமிழ்நாடு ரெட் மற்றும் தமிழ்நாடு கிரீன் ஆகிய 3 அணிகள் பங்கேற்றன. குறிப்பாக, இந்திய பார்வையற்றோர் அணியில் இடம்பிடித்துள்ள கே. ரமேஷ், ஆர். வெங்கடேஷ் முனிகரன் ஆகியோரும் இந்தப் போட்டியில் விளையாடுகின்றனர். 



ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில், பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 



"இதுபோன்ற போட்டித் தொடர்களை நடத்துவதன் மூலம், பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற முடியும். இதன்மூலம், மாநிலத்தின் சிறந்த வீரர்களாக அவர்களாக உருமாற முடியும். மேலும், மாவட்டத்தில் நன்கு திறமையுள்ள மாணவர்களைக் கண்டறிந்து, மாநில அளவிலான அணிக்கு தேர்வு செய்ய முடிகிறது," என்றார் பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் வி. மகேந்திரன். 



Newsletter