சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த கோவை ஆட்டோ ஓட்டுநரின் மகன்

கோவை : ஜப்பானில் நடைபெற்ற 9-வது சர்வதேச கராத்தே போட்டியில் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஜி. கோபி கிருஷ்ணன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை : ஜப்பானில் நடைபெற்ற 9-வது சர்வதேச கராத்தே போட்டியில் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் ஜி. கோபி கிருஷ்ணன் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 



என்.ஜி.பி. கல்லூரியில் பி.காம் படித்து வருபவர் ஜி. கோபி கிருஷ்ணா. ஆட்டோ ஓட்டுநரின் மகனான இவர், இந்தியாவின் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற 9-வது சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்றார். 60 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இவர், வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக, தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கம் வென்றதன் மூலம், ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கு தேர்வானார். 



தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற கோபி, இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் பி.கே. கதிரேசனின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். சுமார் 15 ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பின் பலனாக, கோபி இந்த உச்சத்தை அடைந்துள்ளார். 



"ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்காகும். நான் எனது வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக கடினமாக உழைத்து வருகிறேன். என்னை சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்கியதில், எனது மாஸ்டர் கதிரேசனிற்கு முக்கிய பங்கு உள்ளது. எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் ஜி. கோபி கிருஷ்ணா.

ஜப்பானில் இருந்து திரும்பிய கோபிக்கு, கோவை ரயில்நிலையத்தில் கராத்தே சங்கத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Newsletter