கோவையில் நடந்த கோடைகால துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி முகாம் நிறைவு

கோவை : கோவை ரைபிள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடந்த கோடைகால துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

கோவை : கோவை ரைபிள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடந்த கோடைகால துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.



கோவையில் உள்ள துப்பாக்கிச் சுடுதல் போட்டி வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், ஒரு சிறந்த அடித்தளத்தை உருவாக்கும் கொள்ளும் வகையிலும் கோவை ரைபிள் சங்கம் சார்பில் கோடைகால துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாமில், 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.



அருண்குமார் மற்றும் சத்குரு தேவ் ஆகிய பயிற்சியாளர்கள் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தனர். முகாமின் இறுதி நாளில், ஹிருதிக், ஈஷா மற்றும் தன்ஷிகா ஆகியோர் சிறந்த வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter