விளையாட்டு அனைவருக்கும் இலவசமானது: கூடைப்பந்து பயிற்சியாளர் பிரபு

கோவை : விளையாட்டு அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச கூடைப்பந்து முகாம் நடத்தி வரும் பயிற்சியாளர் பிரபு தெரிவித்தார்.

கோவை : விளையாட்டு அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச கூடைப்பந்து முகாம் நடத்தி வரும் பயிற்சியாளர் பிரபு தெரிவித்தார்.



கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் பயின்று வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறார் பயிற்சியாளர் பிரபு. ராஜா வீதியில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் இவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள், மாநில மற்றும் மாவட்ட அளவில் ஜொலித்து வருகின்றனர். ஆரம்பத்தில் தனியார் பள்ளியில் பயிற்சியாராக செயல்பட்ட போது, மாணவர்களிடம் பயிற்சி ஆடைகள் மட்டுமே இலவசமாக கொடுத்து வந்தார். 



“கட்டணம் செலுத்தி விளையாட்டை கற்று கொள்ளும் முறையை முதலில் ஒழிக்க வேண்டும். இதன்மூலம், அனைத்து மாணவர்களுக்கும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவார். இதனால், இவர்களால் விளையாட்டுக்கு தேவையான ஆடைகளை வாங்க முடியாது. எனவே, அவர்களுக்கு தேவையான விளையாட்டு ஆடைகள் மற்றும் பேருந்து பயணக் கட்டணத்தை வழங்க முடிவு செய்தேன். இதம்மூலம், அவர்களால் விளையாட முடியும்,” என்றார் பயிற்சியாளர் பிரபு.

இவரிடம் இலவசமாக பயிற்சி பெற்றவர்கள் பெரும்பாலானோர் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர்களாக உருவாகியவர்களில், ஶ்ரீலட்சுமி என்ற வீராங்கனையும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் மினி இந்தியா (யு13) போட்டியில் பங்கேற்றுள்ளார்.



பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்த ஶ்ரீலட்சுமி கூறுகையில், “6-ம் வகுப்பு முதல் நான் எனது கூடைப்பந்து போட்டி வாழ்க்கையை தொடங்கினேன். நான் மிகவும் உயரம் என்பதால், எனது உடற்கல்வி ஆசிரியர் என்னை இந்த விளையாட்டிற்கு தேர்வு செய்தார். பின்னர், விளையாட்டை புரிந்துகொண்டு, நுணுக்கங்களுடன் விளையாடினேன். இதன்மூலம், எனது ஆட்டத்திறன் மேம்படைந்தது. எனது இந்த விளையாட்டு வாழ்க்கையில் பயிற்சியாளர் பிரபுவின் பங்கு மிக அதிகம். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு அவர் தான் காரணம், எனக் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 21 இலவச கோடை முகாமின் மூலம் 45 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

Newsletter