கோவையில் இன்று தொடங்கியது 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள்

கோவை : 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது.

கோவை : 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டி கோவையில் இன்று தொடங்கியது. 



இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் இன்று தொடங்கி 21-ம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது.



மாலை 4 மணிக்கு நடைபெற்ற போட்டிகளை இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார்.



மேலும், விழாவில் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவர் ராஜ் சத்தியன், பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் ஜி. செல்வராஜ், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மற்றும் பி.எஸ்.ஜி. விளையாட்டு கழகத்தின் தலைவர் டாக்டர். ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 



இந்தத் தொடரில் நாடு முழுவதும் உள்ள 25 மாநிலங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட தலைசிறந்த நடுவர்கள் பங்கேற்றுள்ளனர். 



Newsletter