கோவையில் 36 வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம் : கேரளா, ஆந்திரா அணிகள் வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்று வரும் 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கேரளா மற்றும் ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன.

கோவை : கோவையில் நடைபெற்று வரும் 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் கேரளா மற்றும் ஆந்திரா அணிகள் வெற்றி பெற்றன. 

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது. 21-ம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர், வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் போட்டியை பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் போட்டிகளை தொடங்கி வைத்தார். 



நேற்று நடைபெற்ற முதல் ஆண்கள் பிரிவு போட்டிகளில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் விளையாடின. இதில், ராஜஸ்தான் அணி 85-29 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 67-64 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடகா அணி, கேரளாவைத் தோற்கடித்தது. மூன்றாவது போட்டியில், ஆந்திர மாநில அணி 120-54 என்ற கணக்கில் அபார வெற்றியை பெற்றது. நான்காவது போட்டியில் உத்திரபிரதேச அணி 87-26 என்ற புள்ளி கணக்கில் இமாச்சல் பிரதேச அணியை வீழ்த்தியது. இதேபோல, உத்தரகாண்ட், அசாம் அணிகள் வெற்றி பெற்றன. 



இதேபோல, பெண்கள் பிரிவில் பஞ்சாப், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

ஆனால், முதல் நாள் போட்டியில் தமிழக அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்கள் பிரிவில் தமிழக அணி 82-63 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானாவிடம் வீழ்ந்தது. இதேபோல, தமிழக பெண்கள் அணி, 79-29 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய பிரதேசத்திடம் தோல்வியை தழுவியது.



Newsletter