36-வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி : தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி

கோவை : 36-வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பெண்கள் அணி வீழ்த்தியது.

கோவை : 36-வது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியை 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு பெண்கள் அணி வீழ்த்தியது.



இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. 21-ம் தேதி வரை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்தப் போட்டியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர், வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றைய லீக் போட்டியில், தமிழ்நாடு பெண்கள் அணி, மகாராஷ்டிராவை எதிர்கொண்டு விளையாடியது. இதில், 68-50 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. தமிழக அணி சார்பில் சத்யா 28 புள்ளிகள் பெற்றார்.



மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 76-75 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளா அணி த்ரில் வெற்றி பெற்றது. கேரள அணி தரப்பில் அனின் மேரி 25 புள்ளிகள் பெற்று, அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுத்தார்.



இதேபோல, ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் அணி 65-63 என்ற புள்ளிக்ள வித்தியாசத்தில் கர்நாடகாவை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்றது.

Newsletter