பி.எஸ்.ஜி நடத்தும் தேசிய கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

கோவை: பி.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கின

கோவை:  à®ªà®¿.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கின 

பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியின் முதல்வரும், அக்கல்லூரி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவருமான ருத்ரமூர்த்தி இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார்.



நாட்டில் உள்ள முன்னோடி அணிகள், ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. லீக் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா மூன்று ஆட்டங்களில் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் விஜயா வங்கி மற்றும் பெங்களூர் ஐ.சி.எப் அணிகள் மோதின, இதில், 91-க்கு 51 என்ற புள்ளிகள் கணக்கில் விஜயா வங்கி அணி வெற்றி பெற்றது.



தொடர்ந்து, இந்திய ரயில்வே (டெல்லி) மற்றும் கேரளா சுங்க வரித்துறை அணிகள் மோதிய போட்டியில், ரயில்வே அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சென்னை வருமான வரித்துறை அணி, இந்திய விமானப்படை அணியை 70-க்கு 61 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Newsletter