தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் கோத்தகிரியில் நாளை தொடக்கம்

நீலகிரி: ஜூட் பள்ளி நடத்தும் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் கோத்தகிரியில் உள்ள வேஸ்ட்புரூக் அரங்கில் நாளை நடைபெறுகிறது.

நீலகிரி: ஜூட் பள்ளி நடத்தும் தேசிய அளவிலான வாலிபால் போட்டிகள் கோத்தகிரியில் உள்ள வேஸ்ட்புரூக் அரங்கில் நாளை நடைபெறுகிறது. 

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 400 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. 

தேசிய விளையாட்டு வீரர்களான செல்வ பிரபு மற்றும் எம்.ஆர். கார்த்திகேயன் இந்த விளையாட்டில் 'ஸ்பார்ட்டர்' ஆக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter