அவினாசிலிங்கம் ஐயா நினைவு கைப்பந்து போட்டியில் பி.கே.ஆர். மகளிர் கல்லூரி அணி சாம்பியன்

கோவை : மாநில அளவிலான 3-வது அவினாசிலிங்கம் ஐயா நினைவு கைப்பந்து போட்டியில் பி.கே.ஆர். மகளிர் கல்லூரி அணி கோப்பையை வென்றது.


கோவை : மாநில அளவிலான 3-வது அவினாசிலிங்கம் ஐயா நினைவு கைப்பந்து போட்டியில் பி.கே.ஆர். மகளிர் கல்லூரி அணி கோப்பையை வென்றது. 

மகளிருக்கான 3-வது அவினாசிலிங்கம் ஐயா நினைவு கைப்பந்து போட்டி அவினாசிலிங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டித் தொடரில் பல்வேறு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.



இதில், கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்த பி.கே.ஆர். மகளிர் கல்லூரியும், விருதுநகரைச் சேர்ந்த கலசலிங்கம் பல்கலைக்கழக அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பி.கே.ஆர். அணி வீராங்கனைகள் தங்களின் அபார ஆட்டத்தால் 2-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

 

இதேபோல, 3-வது இடத்திற்கான போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அணி, 2-0 என்ற கணக்கில் அவினாசிலிங்கம் கல்லூரியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோவை மாவட்ட உடற்கல்வித்துறையின் ஆய்வாளர் அனந்த லட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் வீரர்களுக்கு மரத்தினால் ஆன பதக்கங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Newsletter