கடந்த மாதம் 7 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கடந்த மே 6-ஆம் தேதி நடத்திய நடவடிக்கையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீரா பெஹரா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்ததாக கூறப்படும் அவர் பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொது ஒழுங்குக்கும் பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக கருதி, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், ஐபிஎஸ், பரிந்துரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ், சமீரா பெஹராவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அல்லது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், தங்கள் பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் 94981 81212 என்ற காவல்துறை உதவி எண் அல்லது 7708 100100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கடந்த மே 6-ஆம் தேதி நடத்திய நடவடிக்கையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீரா பெஹரா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்ததாக கூறப்படும் அவர் பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொது ஒழுங்குக்கும் பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக கருதி, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், ஐபிஎஸ், பரிந்துரை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், ஐஏஎஸ், சமீரா பெஹராவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அல்லது பொது சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், தங்கள் பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் 94981 81212 என்ற காவல்துறை உதவி எண் அல்லது 7708 100100 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.