கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் 'அறிவார்ந்த கம்ப்யூட்டிங்' குறித்த 11-வது தேசிய மாநாடு!

குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 'அறிவார்ந்த கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் 11-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைப் பேராசிரியர் சந்திரமௌலி பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் 11வது தேசிய மாநாடு நடைபெற்றது.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் ஸ்ட்ரீம், ஐ.சி.டி (ICT)அகாடமியுடன் இணைந்து 'அறிவார்ந்த கம்ப்யூட்டிங்' தலைப்பில் 11-வது தேசிய மாநாட்டை நடத்தியது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியரும், கணினி அறிவியல் துறைத் தலைவருமான சந்திர மௌலி பி.வி.எஸ்.எஸ்.ஆர். தலைமை விருந்தினராக பங்கேற்று இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து மாநாட்டில் அவர் பேசுகையில், உலகில் உள்ள பல்வேறு துறைகளுக்கு ஐசிடியின் பயன்பாடு தேவை. தொலைதூர கிராமங்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு வந்துவிட்டது.

மக்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை புதுமைப்படுத்துவது காலத்தின் தேவை. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு சமூக முன்னேற்றத்திற்கான புதிய புதுமையான நுட்பங்களைக் கண்டறிய வேண்டும், என்றார்.

இதேபோல், கவுரவ விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி என்.ஐ.டி.யின் உதவிப் பேராசிரியர் பி.குமரன், நுண்ணறிவு கம்ப்யூட்டிங் குறித்தும், அதன் நுணுக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்வதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஐசிடி மற்றும் கணிதத்துறை டீன் ஜீன் மார்செலின் வரவேற்றார், இந்த மாநாட்டின் நிகழ்வுகளை கல்லூரி முதல்வர் ஆர். ஜெகஜீவன் துவக்கி வைத்தார்.

கணினி அறிவியல் துறைத் தலைவர் சுனிதா, கணினி அறிவியல் துறை துணை பேராசிரியர் அனுஜா பெட்ரீஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மேலும் இந்த மாநாட்டில், சுமார் 320 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இறுதியாக பிசிஏ மற்றும் சிஎஸ்ஏ துறைத் தலைவர் ரேணுகா தேவி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...