வேளாண் பல்கலையில்., இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான புதுமைப் புணைவு பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் நுட்பவியல் மையத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழக புதுமைப் புணைவு குழுமத்திலிருந்து, கடந்த 5-ம் தேதி அன்று பல்கலைக்கழகத்தின் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு 'ஆராய்ச்சியில் புதுமைப் புணைவுக்கான ஊக்குவித்தல்' எனும் தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் நுட்பவியல் மையத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழக புதுமைப் புணைவு குழுமத்திலிருந்து, கடந்த 5-ம் தேதி அன்று பல்கலைக்கழகத்தின் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு 'ஆராய்ச்சியில் புதுமைப் புணைவுக்கான ஊக்குவித்தல்' எனும் தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு துறைகளில் இருந்து 47 ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ஆர்.ஞானம் மற்றும் தாவர உயிர்நுட்பவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் எஸ். மோகன்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியானது 40 வயதிற்குட்பட்ட இளம் வேளாண் ஆராய்ச்சியாளர்களுக்கென, ஆராய்ச்சியில் புதுமைப் புணைவு காண்பதற்கான தூண்டுதலாக ஒரு தனித்துவம் வாய்ந்த பயிற்சியாக முதன் முறையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது ஆராய்ச்சியில் உருவாகும் தொழில்நுட்பத்தின் காப்புரிமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தைப் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது. பெங்களுருவின் ழுமுஏமு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் ஆர். உமாசங்கர் அவர்கள் ஆராய்ச்சியாளரின் புதுமைப் புணைவுக்கான குணாதிசயங்களை வலியுறுத்தினார்.

மேலும், பங்கேற்பாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவர் சில வழக்கு ஆய்வுகளை பகிர்ந்து கொண்டார். பின்னர், அறிவுசார் சொத்துரிமைகள் பற்றி பேராசிரியர் முனைவர் கே.என். செல்வராஜ் மற்றும் பல்லுயிர் சட்டம், 2002 பற்றி தேசிய பல்லுயிர் ஆணையத்தின் முனைவர் கே.பி. ரகுராம் ஆகியோர் விரிவுரையாற்றினர்.

Newsletter