தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு

கோவை : தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.


கோவை : தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் தொடர் பண்டிகை மற்றும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் வரும் மாதங்களில் காய்கறிகளுக்கு சாதகமான விலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 14 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் உழவர்சந்தைகளில் நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலையை சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. 

ஆய்வு முடிவின் அடிப்படையில் நவம்பர் - டிசம்பர் 2018 வரை தரமான தக்காளியின் பண்ணை விலை ரூ. 17 முதல் ரூ. 20-வரையும், நல்ல தரமான கத்திரி கிலோவுக்கு ரூ. 23 முதல் ரூ. 25 ஆகவும், தரமான வெண்டை பண்ணை விலை ரூ. 21 முதல் ரூ. 23 வரை இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter