கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை., களப்பணியாளர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் களப்பணியாளர்களுக்கு “சாண எரிவாயு தொழில்நுட்பம் நிலையான எரிபொருள் மற்றும் கர்ம உரம்” என்ற 4 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் களப்பணியாளர்களுக்கு “சாண எரிவாயு தொழில்நுட்பம் நிலையான எரிபொருள் மற்றும் கர்ம உரம்” என்ற 4 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உயிர் சக்தி துறையும் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் இணைந்து “சாண எரிவாயு தொழில்நுட்பம் நிலையான எரிபொருள் மற்றும் கர்ம உரம்” என்ற தலைப்பிலான பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 30-ம் தேதி தொடங்கிய இந்த முகாமானது இன்றுடன் நிறைவு பெற்றது. 

இப்பயிற்சியில் வேளாண்துறையிலிருந்து வேளாண் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து சாண எரிவாயு தொழில்நுட்ப அலுவலர்களும் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் பல்வேறு வற்றாத ஆற்றல் வளத் தொழில்நுட்பங்கள் செய்முறை மூலமாக விளக்கப்பட்டன. 

இன்று நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் உயிர்ஆற்றல் துறையின் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சு. புகழேந]தி வரவேற்புரை வழங்கினார். 

பின்னர், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேளாண் மக்களுக்கு சென்றடையும் உத்திகளைக் களப்பணியாளர்களுக்கு வெளியீடு மற்றும் மக்கள் தொடர்பு துறையின் தனிஅலுவலர் மோகன் தெளிவாக விளக்கினார். 

Newsletter