Exclusive: பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை தவிர்க்குமாறு பொள்ளாச்சி விவசாயிகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவுரை

கோவை : தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதற்கு மாற்றாக, ஈக்களையே உணவாக உட்கொள்ளும் தட்டான் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


கோவை : தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதற்கு மாற்றாக, ஈக்களையே உணவாக உட்கொள்ளும் தட்டான் பூச்சிகளை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.



பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக, தென்னை மரங்களை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள் பெருக்கமடைந்து வருகின்றன. தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் முட்டையிட்டு, பெருக்கமடையும் வெள்ளை ஈக்கள், காலை மற்றும் மாலை நேரத்தில் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தென்னை தோட்டங்களிலுள்ள மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

வெள்ளை ஈக்கள் பாதிப்பால் தென்னை மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, தேங்காய்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனை தடுக்க பூச்சிகொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், வெள்ளை ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 



இந்த நிலையில் வெள்ளை ஈக்களை உணவாக உட்கொள்ளும் தட்டான் பூச்சிகள் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இவை, வெள்ளை ஈக்களை உட்கொள்வதால் தென்னை மரங்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாப்பதோடு, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டை தவிர்க்குமாறு, தென்னை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Newsletter