நீர் பனி அதிகரிப்பு : ஸ்பிரிங்களர் முறையில் நீர் பாய்ச்சி தாவரங்களைக் காக்க நீலகிரி விவசாயிகள் திட்டம்

நீலகிரி : நீலகிரியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், அதிகரித்துள்ள நீர் பனியினால் ஏற்படும் குளிரில் இருந்து தாவரங்களை காப்பாற்ற ஸ்பிரிங்களர் முறையில் தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், அதிகரித்துள்ள நீர் பனியினால் ஏற்படும் குளிரில் இருந்து தாவரங்களை காப்பாற்ற ஸ்பிரிங்களர் முறையில் தண்ணீர் பாய்ச்ச விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்து, கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அதிகரித்துக் காணப்படுகிறது. அதில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. ஆனால், நள்ளிரவு நேரங்களில் விழும் நீர் பனி பொழிகிறது. 

இதையடுத்து, இரவு நேரங்களில் குளிர் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நீர் பனியால் தாவரங்கள் கருகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்து வருகின்றனர். அதன்படி தற்போது விதைக்கப்பட்டுள்ள காய்கறி விதைகள் பனிக்கு கருகாமல் இருக்க ஸ்பிரிங்களர் மூலம் நிலத்தினை ஈரப்படுத்தி சம அளவிலான தட்பவெப்ப நிலையில் வைக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நீர்பனி ஜனவரி மாதம் முழுவதும் இருக்க வாய்ப்பிருப்பதால் விளைபொருட்களைக் காப்பாற்ற பல்வேறு நடவடிக்கையில் நீலகி ரிவிவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

Newsletter