பசுமைக்குடில் மாதிரி ஒப்பந்தம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கையெழுத்து

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் போராக் நிறுவனம் பசுமைக்குடில் தொழில்நுட்ப மாதிரியை தருமபுரி அறிவியல் நிலையத்தில் அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் போராக் நிறுவனம் பசுமைக்குடில் தொழில்நுட்ப மாதிரியை தருமபுரி அறிவியல் நிலையத்தில் அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் அப்பகுதிக்கேற்ற பாதுகாக்கப்பட்ட முறை மலர் மட்டும் காய்கறி சாகுபடிக்கான மாதிரியை போராக் நிறுவன உதவியுடன் வேளாண்மை விரிவாக்க இயக்குனரகம் செயல்படுத்தவுள்ளது. இந்த பசுமைக்குடில், உயர்மதிப்பு தோட்டக்கலை விளைபொருட்களான சாமந்தி, ஜெர்பரா, குடைமிளாய், வெள்ளரி போன்றவற்றின் உயர்சாகுபடி தொழில்நுட்பங்களின் மாதிரியாக இருக்கும். இந்த பசுமைக்குடில் மாதிரி விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

மேலும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நீ.குமார் முன்னிலையில், இந்த ஒப்பந்தத்தில் பல்கலைக்கழக பதிவாளர் டி.சுதாகர் மற்றும் போராக் நிறுவனத்தின் துணைத்தலைவர் அனில் கிருஷ்ணா ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். 

Newsletter