கோவையில் உயிர் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி பட்டறை தொடக்கம்

கோவை : தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையம் இணைந்து நடத்தும் உயிர் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பயிரலரங்கம் இன்று தொடங்கியது.

கோவை : தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையம் இணைந்து நடத்தும் உயிர் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பயிரலரங்கம் இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் மையம் இயங்கி வருகிறது. அதன் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. நிகழ்வினை நடத்தும் மையத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.ரங்கசாமி முன்னிலை வகித்தார். இதே பொறுப்பினை நிர்வகித்த முன்னாள் இயக்குனர் எஸ். சதாசிவம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.



இந்த நிகழ்ச்சியில், நிர்வாக இயக்குனர்எஸ்.ஆர்.ரங்கசாமி பேசும் போது உயிரியலின் முக்கியத்துவம் மற்றும் மூலக்கூறுயியல் மற்றும் தாவர அறிவியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் இயக்குனர் எஸ். சதாசிவம், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் முன்னால் மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது என வலியுறுத்தினார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் இதே துறையில் பயின்று இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட அயல்நாடுகளிலும், மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், ராணுவ உணவு ஆராய்ச்சி ஆய்வகம் போன்ற தேசிய நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்ற முன்னாள் மாணவர்கள் தங்களுடைய ஆராய்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.



இதில், சுமார் 437 விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். 

Newsletter