வரும் 30-ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு

கோவை : குரூப் 4 தேர்வுக்கான ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 30-ம் தேதி நடக்கிறது.


கோவை : குரூப் 4 தேர்வுக்கான ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 30-ம் தேதி நடக்கிறது. 

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ தொகுதி-4 பணிக்காலியிடத்‌ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடியின மனுதாரர்கள்‌ தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்‌ வழிகாட்டி நிலையம்‌ மூலம்‌ சிறப்பு பயிற்சி வகுப்பு வரும் 30-ம் தேதி முதல்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்‌ வழிகாட்டி நிலையம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி வகுப்பிற்கு மனுதாரர்கள்‌ கட்டணம்‌ எதுவும்‌ செலுத்தத்‌ தேவை இல்லை. இந்த இலவச பயிற்சி வகுப்பில்‌, பாடக்குறிப்புகள்‌ வழங்கப்படுவதுடன்‌ குழு விவாதம்‌, பாடவாரியாக வகுப்புகள்‌ மற்றும்‌ மாதிரித்‌ தேர்வுகள்‌ நடத்தப்பட்டு தேர்வில்‌ தேர்ச்சி பெற அனைத்து வழிவகைகளும்‌ செய்யப்படுகிறது. ஆகவே, போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும்‌ ஆதிதிராவிட மற்றும்‌ பழங்குடியின விண்ணப்பதாரர்கள்‌ இவ்வாய்ப்பினைப்‌ பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்‌ வழிகாட்டி நிலையம்‌, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ நடைபெறவுள்ள இப்பயிற்சி வகுப்புகளில்‌ கலந்து கொள்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்த மனுதாரர்கள்‌, விண்ணப்பித்தற்கான ஆதாரம்‌ மற்றும்‌ புகைப்படத்துடன்‌ விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ செயல்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு நிலையத்தில்‌ விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌, விவரங்களுக்கு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும்‌ வழிகாட்டி நிலைய தொலைபேசி எண்ணில்‌ (0422-2648895) தொடர்பு கொள்ளலாம்‌. இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு தேர்வில்‌ தேர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்‌ அடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...