தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ்களின்‌ உண்மைத்‌ தன்மையை இனி இணையதளத்தில்‌ சரிபார்க்கலாம்

கோவை : தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை எளிமையாகவும்‌, விரைவாகவும்‌ வழங்கும்‌ பொருட்டு, இணையதளம்‌ மூலம்‌ சரிபார்க்கும்‌ திட்டம்‌ துவக்கப்பட்டுள்ளது.

கோவை : தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை எளிமையாகவும்‌, விரைவாகவும்‌ வழங்கும்‌ பொருட்டு, இணையதளம்‌ மூலம்‌ சரிபார்க்கும்‌ திட்டம்‌ துவக்கப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறையின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ மாவட்ட திறன்‌ பயிற்சி அலுவலகங்களில்‌ ஜ.டி.ஐ. முடித்த பயிற்சியாளர்களுக்கு, தனியார்‌ மற்றும்‌ அரசு நிறுவனங்களில்‌ தொழிற்பழகுநர்களாக பயிற்சி வழங்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற தொழிற்பழகுநர்களுக்கு, தேசிய தொழிற்பழகுநர்‌ சான்றிதழ்கள்‌ மத்திய அரசால்‌ வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில்‌ பணியமர்த்தப்படும்‌ போது தொழிற்பழகுநர்கள்‌ சமர்ப்பிக்கும்‌ சான்றிதழ்களின்‌ உண்மைத்‌ தன்மையை சரி பார்க்க தபால்கள்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, பின்னர்‌ தபால்‌ மூலமாகவே பதில்‌ அளிக்கப்பட்டு வந்தது. இத்துறையில்‌ தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, சான்றிதழ்கள்‌ வழங்கும்‌ பணிகள்‌ கணினி மயமாக்கப்படாமல்‌ இருந்ததால், சான்றிதழ்களின்‌ உண்மைத்தன்மை சரிபார்ப்பு பணிகள்‌ உரிய ஆவணங்களுடன்‌ ஒப்பு நோக்கும்‌ பொருட்டு தபால்கள்‌ மூலம்‌ பெறப்பட்டு வந்தது. 

தற்போது, இதனை எளிமையாகவும்‌, விரைவாகவும்‌ வழங்கும்‌ பொருட்டு, இணையதளம்‌ மூலம்‌ சரிபார்க்கும்‌ திட்டம்‌ துவக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற தொழிற்பழகுநர்களை தனியார்‌ நிறுவனங்களில்‌ பணியமர்த்தும்‌ போது, அவர்களது சான்றிதழ்களின்‌ உண்மைத்தன்மையை www.skilltraining.in.gov.in என்ற .இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்‌, எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...