ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்துவர்கள் அரசின் நிதியுதவியைப் பெற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை : ஜெருசலேம்‌ புனித பயணம்‌ மேற்கொள்வதற்காகத் தமிழ அரசால்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ. 20,000 நிதி உதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெற விரும்பும்‌ கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

கோவை : ஜெருசலேம்‌ புனித பயணம்‌ மேற்கொள்வதற்காகத் தமிழ அரசால்‌ நபர்‌ ஒருவருக்கு ரூ. 20,000 நிதி உதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெற விரும்பும்‌ கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 

இத்திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்துவர்கள் குழுவில், 50 கன்னியாஸ்திரிகள்‌ அருட்சகோதரிகள்‌ புனித பயணம் மேற்கொள்‌ள அனுமதித்தும்‌ அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது. இப்புனித பயணம்‌ இஸ்ரேல்‌, எகிப்து மற்றும்‌ ஜோர்டான்‌ ஆகிய நாடுகளில்‌ உள்ள பெத்லஹேம்‌, ஜெருசலேம்‌ நாசரேத்‌, ஜோர்டான்‌ நதி, கலிலேயாசமுத்திரம்‌ மற்றும்‌ கிறிஸ்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம்‌ அக்டோபர்‌ முதல்‌ 2020-ம் ஆண்டு மார்ச்‌ வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம்‌ 10 நாட்கள்‌ வரை இருக்கும்‌.

இதற்கான விண்ணப்பப்படிவம்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களில்‌ இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம்‌. தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம்‌ செய்தும்‌ பயன்படுத்தலாம்‌. இத்திட்டத்திற்கான நிபந்தனைகள்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ அனைத்தும்‌ உரிய இணைப்புகளுடன்‌ அஞ்சல்‌ உறையில்‌ “கிறிஸ்துவர்களின்‌ ஜெருசலேம்‌ புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும்‌ விண்ணப்பம்‌ 2019-2020 என்று குறிப்பிட்டு, ஆணையர்‌, சிறுபான்மையினர்‌ நலத்துறை, கலசமஹால்‌ பாரம்பரிய கட்டடம்‌, முதல்தளம், சேப்பாக்கம்‌, சென்னை-600 005 என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் கிடைக்கும்‌ வகையில்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌. (நேரில் வர வேண்டியதில்லை).

மேலும்‌ விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ (à®®) சிறுபான்மையினர்‌ நல அலுவலர்‌, கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ / சிறுபான்மையினர்‌ நல இயக்குநரகம்‌, தொலைபேசி எண்‌.044-2852033-த்திலும்‌ தொடர்புகொள்ளலாம்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...