மழை பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க கோவை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக புகார் எண் அறிவிப்பு

கோவை : மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 24 மணிநேரம் செயல்படும் புகார் எண் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 24 மணிநேரம் செயல்படும் புகார் எண் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இடர்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, அப்புகார்களின் அடிப்படையில் உடனடி நிவாரணப் பணிகளை செய்ய ஏதுவாக கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், 24 மணிநேரம் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், வடக்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2243133 என்ற எண்ணிற்கும், தெற்கு மண்டலத்திற்கு 0422-2252482 என்ற எண்ணிற்கும், கிழக்கு மண்டலத்திற்கு 0422-2572696, 0422-2577056 என்ற எண்களிலும், மேற்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2551700 என்ற எண்ணிற்கும், மத்திய மண்டல அலுவலகத்திற்கு 0422-2215618 என்ற எண்ணிற்கும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு 0422-2390261, 0422-2390262, 0422-2390263 ஆகிய தொலைபேசி எண்களிலும், 8190000200 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், 74404 - 22422 என்ற கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்களின் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் தகுந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...