மறு அளவீடு குறித்த அறிவிப்பு கிடைத்த நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்

கோவை: கவுண்டம்பாளையம் நகர்புற பகுதிகளில் மறுநில அளவைப் பணிகள் முடித்து, நிலஉரிமைக்கான அறிவிப்புகள் பெற்றுக் கொண்ட நிலஉரிமையாளர்கள், ஆட்சேபனை இருப்பின் 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கவுண்டம்பாளையம் நகர்புற பகுதிகளில் மறுநில அளவைப் பணிகள் முடித்து, நிலஉரிமைக்கான அறிவிப்புகள் பெற்றுக் கொண்ட நிலஉரிமையாளர்கள், ஆட்சேபனை இருப்பின் 30 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

​இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- அரசாணை(நிலை) எண்.733 வருவாய்த்துறை நாள்:14.11.2006-ன்படி தமிழ்நாடு முழுவதும் நவீன நில அளவை கருவிகளின் மூலம் மறுநில அளவை மேற்கொள்ள அரசால் உத்தரவிடப்பட்டது. இந்த அரசாணையின்படி, கோவை மாவட்டம், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் நகர்புற பகுதிகளில் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் மறுநில அளவைப் பணிகள் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையால் மேற்கொள்ளப்பட்டது.

​தற்போது, நிலஅளவைப் பணிகள் முடிவுற்று நிலஉரிமையாளர்களுக்கு அவர்களது அனுபவத்தில் உள்ள நிலத்தின் புல எண், பரப்பு விபரங்களுடன் தமிழ்நாடு நிலஅளவை எல்லைச் சட்டம் 1923 பிரிவு 9(2)-ன்படி அறிவிப்பு, நில உரிமையாளர்களுக்கு நேரிடையாக நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை பணியாளர்களால் சார்வு செய்யப்பட்டு வருகிறது. 

9(2) அறிவிப்பில் இடம் பெற்றுள்ள விபரங்கள் தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கும்பட்சத்தில், 9(2) அறிவிப்பு பெற்றுக் கொண்ட 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிலஉரிமையாளர்கள், தங்கள் கைவசம் உள்ள பத்திர ஆதாரங்கள், லே-அவுட் வரைபடங்கள் மற்றும் ஆவண ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். பெயர் பதிவு மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை ஏதுமிருப்பின் நகரநிலவரித்திட்ட தனிவட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

​தமிழ்நாடு முழுவதும் நவீன நிலஅளவை கருவிகள் மூலம் மறுநிலஅளவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலஉரிமையாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலவிபரங்கள் துல்லியமாக அளவீடு செய்யப்பட்டு, சரியான பரப்பளவு நிலஅளவை ஆவணங்களில் டிஜிட்டல் முறையில் பதிய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் இத்திட்டப் பணியின் மூலம் தங்களது நிலஉரிமைக்கான 9(2) அறிவிப்புகள் பெற்றுக் கொள்வதுடன், அதில் ஏதேனும் ஆட்சேபனையிருப்பின் அவற்றை சட்டபூர்வமாக தீர்வு காணும் வகையில் மனு அளிக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினை நிலஉரிமையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...